ப்ரதீப்பை அடுத்து கதாநாயகனாகக் களமிறங்கும் டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் அபிஷன்!

vinoth

சனி, 5 ஜூலை 2025 (12:41 IST)
இந்த ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர் படமான ’டூரிஸ்ட் பேமிலி’படம் கடந்த மே 1 ஆம் தேதி ரிலீஸானது. படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்க, சிம்ரன், யோகி பாபு மற்றும் சசிகுமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.

சுமார் 12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் திரையரங்குகள் மூலமாக மட்டும் சுமார் 75 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்தது. அதையடுத்து ஜூன் 2 ஆம் தேதி முதல் ஓடிடியில் வெளியாகி ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தற்போது தமிழ் சினிமாவின் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார்.

டூரிஸ்ட் பேமிலி படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர் அடுத்து இப்போது கதாநாயகன் அவதாரம் எடுக்கவுள்ளார். அவர் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.  இந்த படத்தை டூரிஸ்ட் பேமிலி படத்தின் இணை இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்