சூரரைப் போற்று திரைப்படத்தில் மூன்று வசனகர்த்தாக்கள்! தெறிக்கும் வசனங்கள்!!

வெள்ளி, 6 நவம்பர் 2020 (11:19 IST)
சூரரைப் போற்று திரைப்படத்தின் வசனத்தை மூன்று பேர் எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது.

சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படம் அமேசான் பிரைமில் வரும் நவம்பர் 12 ஆம் தேதி ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் டிரைலர், இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. காட்சிகளாக மட்டுமில்லாமல் டிரைலரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் கூட ரசிகர்கள் ரசிக்கும் விதமாக உள்ளன.

இந்நிலையில் அதுபற்றி கூடுதலான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தமிழ்ப் பதிப்புக்கான வசனங்களை உறியடி 1 மற்றும் உறியடி 2 ஆகிய படங்களின் இயக்குனர் விஜய்குமார்தான் எழுதியுள்ளாராம். ஆனால் இதில் மதுரை வட்டார வழக்குக்காக வசனகர்த்தா மணிகண்டன் மற்றும் க பெ ரணசிங்கம் பட்த்தின் இயக்குனர் விருமாண்டி ஆகியோர் மெருகேற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்