சிலர் செய்யும் நாசவேலை இது... அதை உடைக்கத்தான் - இயக்குநர் சேரன்

வெள்ளி, 10 ஜூலை 2020 (16:43 IST)
தமிழ் சினிமாவில் உள்ள பொக்கிஷமான இயக்குநர்களில் ஒருவர் சேரன். கமர்சியல் பட இயக்குநரான கே.எஸ்.ரவிக்குமாரிடன் அசிஸ்டெண்ட்டாக இருந்தவர் என்றாலும் பொற்காலம் , பாண்டவர் பூமி போன்ற கிளாசிக் படங்களையும், ஆட்டோகிராப், பொக்கிஷம் , தவமாய் தவமிருந்து போன்ற எவர் கிரீன் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தியவர் சேரன்.

இந்நிலையில், சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ராஜாவுக்கு செக் என்ற படம் திரையரங்கில் வெளியாக சரியான வரவேற்புக் கிடைக்காத நிலையில்  சேரன் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், நன்றி.. மக்களிடம் தவறில்லை.. நல்ல படைப்புகள் மக்களை சென்றடையாமல் பணத்திற்காக சிலர் செய்யும் நாசவேலை இது. அதை உடைக்கத்தான் மீண்டும் மீண்டும் போராடுகிறோம்.. மக்களுக்கு நேரடியாக நல்ல படங்கள் சென்றடையும் காலம் மிக அருகில்... என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் சேரன், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக பேச்சு எழுந்து வரும் நிலையில் அதில் சேரன் மீண்டு வருவார் என அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்