சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மீது பிரபல பாடகி கடும் தாக்கு

செவ்வாய், 27 நவம்பர் 2018 (13:00 IST)
பிரபல தனியார் தொலைக்காட்சி  நடத்திவரும்  சூப்பர்சிங்கர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சி பல வருடங்களாக நடந்து வருகிறது. பல திறமையான பாடகர்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் உலகத்தின் பார்வைக்கு வந்தனர். அடித்தட்டு மக்களில் பலரது கனவுகளை நினைவாக்கிய நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். 
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பல வருடங்களுக்கு முன்பு பங்கேற்ற பூஜா வைத்தியநாதன் இந்த நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்து உள்ளார்.
 
அவரிடம் ரசிகர் ஒருவர் எப்போது மீண்டும் சூப்பர் சிங்கர் வருவீர்கள் என கேட்ட கேள்விக்கு, 5 நிமிட மேடையில் பாடுவதற்காக 12 மணி நேரம் காத்திருக்க வைப்பார்கள் என  கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்