அஜித்துக்கு இருக்குற நேர்மை கூட உங்களுக்கு இல்லை! - விளாசிய துணை இயக்குனர்!

வியாழன், 25 ஏப்ரல் 2019 (14:47 IST)
பிரபல இயக்குனர் அட்லீயை குறும்பட இயக்குனர் செல்வா மோசமாக விமர்ச்சித்துள்ளார். 

 
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் அட்லீ  பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக பணியாற்றியது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் அப்பேற்பட்ட ஜாம்பவானிடம் பணியாற்றியும் திருட்டு கதைகளை தொடர்ச்சியாக இயக்கி பலரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி வருகிறார்.
 
இருந்தாலும் அவர் இயக்கும் அத்தனை படங்களுக்கு பிளாக் பஸ்டர் ஹிட் அடித்துவிடுகின்றது. சினிமாவை கனவாக வைத்துக்கொண்டு போராடிக்கொண்டிருக்கும் பல கடின உழைப்பாளி இயக்குனர்கள் இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளுக்குள்ளே புகைந்து வருகின்றனர்.   
 
கடைசியாக அட்லீ இயக்கத்தில் வெளிவந்த மெர்சல் திரைப்படம்  ரஜினி நடித்த மூன்று முகத்தின் அச்சு அசல் காப்பி என்று பலருக்கும் பச்சையாக தெரிந்தது. வழக்கமாக அட்லீ இயக்கிய படங்கள் வெளியான பின்பு தான் பழைய படங்களை காபி செய்துவிட்டார் என்கிற விமர்சனம் எழும். ஆனால், இந்த முறை படம் வெளியாகுவதற்கு முன்பே தளபதி 63 படத்தை என்னுடைய கதையை வைத்துதான் இயக்குகிறார் என்று அட்லீ மீது துணை இயக்குனர் செல்வா என்பர் பகிரங்கமாக குற்றம் சாட்டி நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
 
பிறகு இந்த கதை திருட்டு கதை விவகாரம் குறித்து அட்லீயிடம் பேசியபோது,  இந்த பிரச்னையை கைவிட்டு விடுமாறு அட்லீ தன்னிடம் கூறியதாக துணை இயக்குனர் செல்வா தெரிவித்திருந்தார். 


 
இந்நிலையில் தற்போது இதுகுறித்து பேசியுள்ள செல்வா, அஜித் சார் கூட தான் ரஜினியின் பில்லா படத்தை கையிலெடுத்தார். அப்போது அவர் நினைத்திருந்தால், ரைட்ஸ் வாங்காமல், அப்படியே எடுத்துவிட்டு, வேறு ஒரு டைட்டில் வைத்து ரிலிஸ் செய்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அந்த நேர்மை ஏன் இவர்களிடம் (அட்லீ) இல்லை?  கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்திலும் உங்கள் பெயர் வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள் இது நியாயமா  என்று கடுமையாக பேசியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்