பிக் பாஸில் பங்கேற்ற நித்யாவுக்கு இத்தனை லட்சம் கொடுத்தாங்க! ஆனால் அவங்க என்ன பண்ணாங்க!

Webdunia
சனி, 23 மார்ச் 2019 (13:13 IST)
கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த பாலாஜி , நித்யா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2-வில்  போட்டியாளர்களாக  கலந்து கொண்டனர். 
 

 
பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த இவர்கள் பிக் பாஸ்  நிகழ்ச்சி முடிவதற்குள் ஒன்றிணைத்து விடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போதும் இவர்கள் பிரிந்தே வாழ்ந்து வருகின்றனர். 
 
அந்நிகழ்ச்சியில் மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசி மக்கள் மனதில் இடம்பிடித்த நித்தியா கணவர் பாலாஜி மூலம் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். 
 
கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த தாடி பாலாஜி  காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் என் குடும்பத்தை நாசமாக்கிவிட்டார். என் மன உளைச்சலுக்கு அவர் தான் காரணம். அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இதயடுத்து மனோஜ் குமார் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். 
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தாடி பாலாஜி நித்யா குறித்து பேசுகையில், அவர் சாக்கடையில் விழுந்து விட்டார். அவரை போன்ற ஒரு மோசமான பெண்ணே இருக்கமுடியாது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதற்காக அவருக்கு 4 லட்சம்  கொடுக்கப்பட்டது. ஆனால், வெளியே வந்து விஜய் டிவி பற்றி மோசமாக பேசினார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி அனைத்தும் பொய் என்று கூறியிருந்தார் என பாலாஜி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்