ஓடும் காரில் நடிகையை கற்பழிக்க முயன்ற இயக்குனரும், நடிகரும்!

புதன், 16 ஆகஸ்ட் 2017 (17:09 IST)
கேரளாவில் சில மாதங்களுக்கு முன்னர் பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த சம்பவம் மறைவதற்குள் மேலும் ஒரு சம்பவம் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் நடந்துள்ளது.


 
 
வளர்ந்து வரும் இளம் தெலுங்கு நடிகை ஒருவர் விஜயவாடா காவல் நிலையத்தில் இயக்குனர் சலபதி மற்றும் நடிகர் ஸ்ருஜன் ஆகியோர் மீது புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் அவர்கள் இருவரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 
நடிகை தனது புகாரில், படப்பிடிப்புக்காக பீமாவரம் செல்ல வேண்டியிருந்தது. அப்போது நான் ரயிலில் வருகிறேன் என கூறினேன். அதற்கு நடிகர் ஸ்ருஜன் மற்றும் இயக்குனர் சலபதி ஆகியோர் இல்லை காரில் வாருங்கள் என அழைத்து சென்றனர்.
 
அப்போது அவர்கள் காரில் வைத்து என்னை பலாத்காரம் செய்ய முயற்சித்தார்கள். இதனை யாரிடமாவது சொன்னால் உன் வாழ்க்கையே காலி, பட வாய்ப்பே வராமல் செய்துவிடுவோம் என மிரட்டினார்கள். அவர்களிடமிருந்து எப்படியோ தப்பித்து காவல் நிலையம் வந்தேன் என கூறியுள்ளார் அந்த நடிகை.
 
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யாத போலீசார் அந்த இயக்குனரை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்