ரசிகர் மன்ற செயலாளர் உயிரிழப்பு: நேரில் இரங்கல் தெரிவித்த சூர்ய!

ஞாயிறு, 29 மே 2022 (15:41 IST)
ரசிகர் மன்ற செயலாளர் உயிரிழப்பு: நேரில் இரங்கல் தெரிவித்த சூர்ய!
சூர்யாவின் ரசிகர் மன்ற செயலாளர் திடீரென உயிரிழந்ததை அடுத்து அவருடைய வீட்டிற்குச் சென்று சூர்யா இரங்கல் தெரிவித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நடிகர் சூர்யா நாமக்கல் மாவட்ட ரசிகர் மன்ற செயலாளராக கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்தவர் ஜெகதீஷ்.
 
இவர் நேற்று திடீரென உயிரிழந்ததை அடுத்து அவரது மறைவு குறித்து தகவல் அறிந்த சூர்யா உடனடியாக நாமக்கல் சென்று அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்
 
 மேலும் அவரது மனைவி குழந்தைகளுக்கு ஆறுதல் கூறிய சூர்யா, உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்