சூர்யாவின் ‘கருப்பு’ பட வியாபாரம் தொடங்கியது… வெளிநாட்டு உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம்!

vinoth

செவ்வாய், 28 அக்டோபர் 2025 (07:43 IST)
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் கருப்பு படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்க மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நட்டி நட்ராஜ், ஸ்வாஸிகா மற்றும் ஆர் ஜே பாலாஜி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டது. இன்னும் ஓடிடி மற்றும் சேட்டிலைட் வியாபாரம் முடியாததால் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் படக்குழ் மேல் அதிருப்தியில் அவ்வபோது பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இதனால் ரசிகர்களை சாந்தப்படுத்தும் விதமாக நேற்று இந்த படத்தின் முதல் தனிப்பாடலான ‘God mode’ பாடல் வெளியானது.

இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸாகவுள்ள நிலையில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் ‘கருப்பு’ படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை PHF நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்