சூர்யாவின் அடுத்த படம் இத்தனை மொழிகளில் ரிலீஸா? இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (18:35 IST)
சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் சூர்யா நடித்து வரும் அடுத்த திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் தற்போது இந்த படம் பிப்ரவரி 4ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது
 
அது மட்டுமின்றி தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இந்த படம் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்