வணங்கான் ஷூட்டிங் தாமதம்… பாலாவை அழைத்து சூர்யா சொன்ன ஷாக்கிங் தகவல்!

வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (16:31 IST)
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

இயக்குனர் பாலாவின் அடுத்த படத்தில் சூர்யா நடித்து அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 34 நாட்கள் கன்னியாகுமரியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.  இந்நிலையில் வணங்கான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இப்போது கதை குறித்து இயக்குனர் பாலா விவாதம் செய்து தாமதம் ஆக்கி வருவதாக சொல்லப்படுகிறது. அதனால் சூர்யா “பாலாவிடம், நீங்கள் விவாதத்தை முடியுங்கள். நான் அதற்குள் சிறுத்தை சிவா படத்தை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன்” என சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்