3டியில் உருவாகிறது சுந்தர் சி யின் அரண்மனை 4!

சனி, 22 ஜூலை 2023 (08:06 IST)
தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. 2014ல் துவங்கிய அரண்மனை வரிசையின் மூன்று பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது சுந்தர் சி லைகா தயாரிப்பில் அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இப்போது சுந்தர் சி யே கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சுமார் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கி வருகிறார் சுந்தர் சி. மேலும் இந்த படத்தை 3 டி தொழில்நுட்பத்தில் கொண்டுவரவும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்