படம் ரிலீஸாகி ஒரு ஷோ ஓடிவிட்டாலே வெற்றிவிழாதான்… இயக்குனர் சுந்தர் சி பேச்சு!

திங்கள், 12 ஜூன் 2023 (15:16 IST)
2006 ஆம் ஆண்டு சுந்தர் சி நடிகராக அறிமுகம் ஆன தலைநகரம் திரைப்படம் ரிலீஸானது. இதையடுத்து 17 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

கடந்த ஆண்டே இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்த நிலையில் இப்போது படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளதாக் டிரைலரைப் பார்க்கும் போது தெரிகிறது.

இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் பேசிய இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி “ இயக்குனர் துரையோடு நான் இணைந்து பணியாற்றிய இருட்டு திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம். அந்த படத்தின் வெற்றியை நாங்கள் கொண்டாவே இல்லை. ஆனால் இப்பொழுது கொண்டாடி இருக்க வேண்டும் என தோன்றுகிறது. இப்போதெல்லாம் படம் ரிலீஸாகி ஒரு ஷோ ஒடிவிட்டாலே சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடப்படுகிறது. எனக்கு அரண்மனை போலவே தலைநகரம் படமும் பல பார்ட்களாக வரும் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்