கூலி படத்துக்காக ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் ‘அன்பறிவ்’ சகோதரர்கள் வாங்கிய சம்பளம் இவ்வளவா?

vinoth

புதன், 18 ஜூன் 2025 (10:02 IST)
தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி ஸ்டண்ட் இயக்குனர்களாக இருப்பவர்கள் இரட்டையர்கள் அன்பறிவ். அவர்கள் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த படத்தில் இருந்து அவர்கள் வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

அதன் பின்னர் அவர்கள் இயக்கும் புதிய படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த படமும் கைவிடப்பட்டது. இதையடுத்து அவர்கள் இப்போது கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளனர். இந்த படத்துக்காக அமெரிக்காவில் கமல்ஹாசனோடு இணைந்து சில மாதங்கள் திரைக்கதை எழுதி முடித்துள்ளனர்.

ஜூலையில் ஷூட் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக இதுவரை தென்னிந்தியாவில் எந்த ஸ்டண்ட் இயக்குனர்களும் வாங்காத சம்பளத்தை அன்பறிவ் மாஸ்டர் வாங்குகிறார்களாம். கூலி படத்துக்காக அவர்கள் வாங்கிய சம்பளம் 15 கோடி ரூபாய் என்று சினிமாப் பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி தெரிவித்துள்ளார். இப்போது அவர்கள் படம் இயக்கவுள்ளதால் அதிகளவில் படங்களுக்கு ஸ்டண்ட் காட்சிகள் வடிவமைக்க முடியாமல் போகலாம் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்