படத்தின் திரைக்கதைப் பணிகள் முடிந்துள்ள நிலையில் இந்த படத்தை தன்னுடைய LCU உலகத்தில் இணைக்கும் விதமாக கதையை எழுதியுள்ளார் லோகேஷ். கடந்த ஆண்டே இந்த படம் அறிவிக்கப்பட்டு விட்டாலும் இன்னமும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. லோகேஷ் தன்னுடைய கூலி படத்தில் கவனம் செலுத்தியதால் இந்த படம் தாமதமானதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் ஜூன் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக சொல்லப்படும் நிலையில் இந்த படத்தில் மாதவன் மற்றும் நிவின் பாலி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதே போல கதாநாயகியாக நடிக்க பிரியங்கா மோகன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்பட்டது. இப்போது இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.