சிவகார்த்திகேயனின் புதிய படம்...ரசிகர்கள் அதிருப்தி

செவ்வாய், 29 ஜூன் 2021 (22:22 IST)
நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாகத் தகவல் வெளியாவதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம். ஆனால் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் படம் திரையரங்கில் வெளியாவதையே விரும்புகிறார் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று காலை இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகும் என்று செய்திகள் சமூகவலைதளங்களில் பரவின.

இது சம்மந்தமாக தயாரிப்பு நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் இப்போது கே ஜே ஆர் ராஜேஷ் மறுத்துள்ளாராம். விரைவில் டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவோம் எனவும் கூறியுள்ளாராம்.

இந்நிலையில்  நீண்ட நாள் கழித்து சிவகார்த்திகேயனின் படம் வெளியாவதால் அவரது ரசிகர்கள் இதைத் திரையரங்கில் பார்த்துக் கொண்டாட விரும்புகின்றனர். ஆனால் இப்படம் ஓடிடியில் வெளியாகும் என தகவல்  வெளியாவதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்துப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்