சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ’வாழ்’ – வெளியானது பர்ஸ்ட்லுக் !

வியாழன், 27 ஜூன் 2019 (13:05 IST)
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் மூன்றாவது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு புதுமுக இயக்குனர் அருண் பிரபு இயத்தில் வெளியான அருவி படம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு இந்த படத்திற்காக பல்வேறு விருதுகளும் வழங்கபட்டது. இந்நிலையில் கனா படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், தன்னுடைய தயாரிப்பில் உருவாகும் 3-வது படத்தை அருவி பட இயக்குநர் அருண் பிரபு இயக்க இருப்பதாக அறிவித்தார். இப்படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் அந்த படத்தின் முதல் லுக் போஸ்டரைப் படக்குழு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. புதுமுகங்கள் முழுவதுமாக நடிக்கும் இந்தப் படத்துக்கு வாழ் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அருவிப் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்களே இந்தப் படத்திலும் பெரும்பாலும் பணிபுரிந்துள்ளனர். மிஸ்டரி த்ரில்லர் எனப்படும் அமானுஷ்ய நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்