ஒட்டுமொத்த பட்ஜெட்டில் 90 சதவீதம் இவர்களின் சம்பளத்துக்கே காலி… சிவகார்த்திகேயன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

vinoth

வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (11:48 IST)
தர்பார் தோல்விக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இருந்த ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை வைத்து தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று முன்தினம் சென்னையில் பூஜையோடு தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த வாரம் சில நாட்கள் நடந்தது. அடுத்த கட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என தெரிகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் முருகதாஸ் இணைந்துள்ளதால் இந்த படத்தின் பட்ஜெட் 70 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.

ஆனால் இதில் சிவகார்த்திகேயன், முருகதாஸ் மற்றும் அனிருத் ஆகியோரின் சம்பளமே 60 கோடி ரூபாய் கிட்டத்தட்ட வந்துவிட்டதாம். மீதமுள்ள பணத்தில்தான் படத்தின் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடக்க வேண்டுமாம். இதனால் இந்த படத்தில் முருகதாஸ் படத்தில் வழக்கமாக இருக்கும் பிரம்மாண்டம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்