மீண்டும் சமூக வலைத்தளத்திற்கு வரும் சிம்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு

செவ்வாய், 20 அக்டோபர் 2020 (12:56 IST)
நடிகர் சிம்பு கடந்த 2015 ஆம் ஆண்டு திடீரென டுவிட்டர் பக்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இருப்பினும் அந்த டுவிட்டர் பக்கம் தனது ரசிகர் மன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் அவர்கள் அந்த பக்கத்தை வழி நடத்துவார்கள் என்றும் தெரிவித்திருந்தார். மீண்டும் தேவைப்பட்டால் சமூக வலைத்தளத்திற்கு வருவேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்
 
இந்த நிலையில் தற்போது 5 ஆண்டுகள் கழித்து திடீரென மீண்டும் டுவிட்டர் பக்கத்தில் என்ட்ரி ஆக உள்ளதாக சிம்பு அறிவித்துள்ளார். அக்டோபர் 22ம் தேதி காலை 9.09 முதல் டுவிட்டர் என்ற சமூக வலைத்தளத்தில் மீண்டும் ரீஎன்ட்ரி ஆக உள்ளதாக சிம்பு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சிம்பு தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருவதால் அவரது படங்கள் குறித்த அறிவிப்புகள், ஸ்டில்கள், டீசர், டிரைலர் ஆகியவை இனி அந்தப் பக்கத்திலிருந்து தான் வெளியாகும் என்று தெரிகிறது. மீண்டும் டுவிட்டர் பக்கத்திற்கு சிம்பு திரும்பி உள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

#STR To Arrive On Social Media On 22nd October

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்