வஞ்சகர் உலகம்’ படத்தில், படுக்கை அறை காட்சியில் நடித்தது ஏன்? சாந்தினி பதில்

ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (17:21 IST)

'வஞ்சகர் உலகம்’ படத்தில், படுக்கை அறை காட்சியில் துணிச்சலாக நடித்ததுள்ளார்  நடிகை சாந்தினி.


இது குறித்து அவர் கூறுகையில், ' வஞ்சகர் உலகம் படத்தின் கதையை சொன்ன டைரக்டர் மனோஜ் பீதா, படத்தில் அப்படி ஒரு படுக்கை அறை காட்சி இருப்பதாகவும் சொன்னார். அவரிடம், 2 மணி நேரம் கதையை கேட்டேன். அவர் மீதும், அந்த படக்குழுவினர் மீதும் எனக்கு நம்பிக்கை வந்தது.


என் கதாபாத்திரத்தின் மீது படம் பார்ப்பவர்களுக்கு அனுதாபம் ஏற்படும் என்பதை உணர்ந்தேன். அதனால்தான் நடிக்க சம்மதித்தேன். நான் எதிர்பார்த்தது போலவே ‘வஞ்சகர் உலகம்’ படத்தில், என் கதாபாத்திரம் பாவமாக இருந்தது என்று படம் பார்த்தவர்கள் கூறினார்கள் ' என்றார்.

 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்