மீண்டும் இணையும் வருத்தப் படாத வாலிபர் சங்கக் கூட்டணி!

திங்கள், 27 டிசம்பர் 2021 (16:02 IST)
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் சத்யராஜ் மீண்டும் நடிக்க உள்ளார்.

புதுமுக இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் உருவான தெலுங்குத் திரைப்படம் 'ஜாதி ரத்னாலு'. நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனால் அந்த படத்தின் இயக்குனர் மீது கவனம் அதிகமாக விழுந்துள்ளது. இந்நிலையில் அவர் அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் தமிழ்- தெலுங்கு மொழி படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் தொடங்க உள்ள இந்த படத்துக்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

படத்தின் கதாநாயகி வேடத்துக்கு வெளிநாட்டு பெண்களை தேடி வரும் படக்குழு, மற்ற முக்கியக் கதாபாத்திரங்களுக்கும் நடிகர்களை ஒப்பந்தம் செய்து வருகிறது. அந்த வகையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்குப் பிறகு மீண்டும் சத்யராஜ் சிவகார்த்திகேயனோடு இணைந்து இந்த படத்தில் நடிக்க உள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்