ஊடகங்களுக்கு காரசாரமாக பதிலளித்த சமந்தா!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (16:18 IST)
நடிகை சமந்தா தனது கணவரை பிரிய போவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. ஆனால் தன்னுடன் நடித்த நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு ஆந்திராவிலேயே செட்டில் ஆகிவிட்டார். திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வருகிறார். அதற்கு மாமியார் வீட்டிலும் முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டது. 

ஆனால், அங்கு தான் பிரச்சனையே வெடித்தது. நடிப்பு சுதந்திரத்தை தாராளமாக பயன்படுத்திக்கொண்ட சமந்தா தி பேமிலி மேன் 2 தொடரில் மிகவும் மோசமான காட்சிகளில் நடித்ததால் குடும்பத்திற்குள் அவப்பெயர் உண்டாகிவிட்டதாக சமந்தாவை கணவர் கடிந்துக்கொண்டதாகவும் அதனால் அவர் வீட்டில் இருந்து வெளியேறியதோடு சமந்தா அக்கினேனி என்ற தனது பெயரை எஸ் என்று மட்டும் மாற்றிக்கொண்டதாக செய்திகள் வெளியாகியது. மேலும் அவர் கணவரை பிரிய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இந்த யூகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக சமந்தா  ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ஊடகங்களை சாடியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்