மீண்டும் தொடங்கப்படுகிறதா கமலின் சபாஷ் நாயுடு?

வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (15:24 IST)
கமல்ஹாசன் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் உருவான சபாஷ் நாயுடு திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது.

லைகா தயாரிப்பில் கமல்ஹாசன் எழுதி இயக்குவதாக தொடங்கப்பட்ட ‘சபாஷ் நாயுடு’ திரைப்படம் தொடங்கப்பட்டு பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டது. அமெரிக்காவில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் கமலுக்கு அப்போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மீண்டும் தொடங்கப் படாமலேயே கிடப்பில் இருந்தது.

இந்த படத்தைப் பற்றி அனைவரும் மறந்தே விட்ட நிலையில் இப்போது மீண்டும் இந்த படம் தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக லைகா மற்றும் கமல் ஆகிய இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்