தான் இயக்கும் கில்லர் படத்துக்கான அடுத்த கட்ட வேலைகளை தொடங்கிய எஸ் ஜே சூர்யா!

vinoth

வியாழன், 14 மார்ச் 2024 (08:31 IST)
ஒரு காலத்தில் தென்னிந்திய மொழிகளின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருந்தவர் எஸ் ஜே சூர்யா. ஆனால் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அவர் இயக்கத்தை விட்டார். நடிகராக ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும், அவரால் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முடியவில்லை.

சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அவர் இறைவி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்த முறை கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எல்லா வகையான கதாபாத்திரங்களையும் கலந்து கட்டி நடித்தார். சமீபத்தில் அவர் வில்லனாக நடித்த மாநாடு மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய இரு படங்களும் வெற்றி பெற்று அவரின் நடிப்பு பெரிதாக சிலாகிக்கப்பட்டது.

இதையடுத்து அவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் எஸ் ஜே சூர்யா தான் வெகு நாட்களாக இயக்கவேண்டும் என ஆசைப்பட்ட கில்லர் படத்தினை இயக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார். இந்த படத்துக்காக எஸ் ஜே சூர்யா வெளிநாட்டில் இருந்து ஒரு சொகுசு கார் ஒன்றை வாங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் அவருக்கு இணையான பாத்திரத்தில் கதாநாயகியை உருவாக்கியுள்ளாராம். அதனால் அந்த பாத்திரத்தில் நடிக்க இப்போது கதாநாயகி தேடும் படலத்தில் ஈடுபட்டு வருகிறாராம். விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்