மூன்று நகரங்களில் மூன்று பங்களாக்கள்… ஒரே ஆண்டில் உச்சம் தொடும் ராஷ்மிகா!

புதன், 6 அக்டோபர் 2021 (17:34 IST)
நடிகை ராஷ்மிகா மந்தனா கர்நாடகா, மும்பை மற்றும் கோவா என மூன்று நகரங்களில் மூன்று சொகுசு பங்களாக்களை வாங்கியுள்ளார்.

தென்னிந்தியாவின் முன்னணி இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. படங்களில் மட்டுமில்லாமல் சமூகவலைதளங்களிலும் இவர் ஒரு சூப்பர் ஸ்டார்தான். அந்த அளவுக்கு இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். இத்தனைக்கும் தமிழில் அவர் நடித்த சுல்தான் படம் மட்டுமே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது பாலிவுட் மற்றும் தென்னிந்திய படங்களில் அவர் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இதையடுத்து மும்பையில் படங்களில் நடிப்பதற்கு மும்பையில் ஒரு அபார்ட்மெண்டும், கோவாவில் ஒரு சொகுசு பங்களாவும், கர்நாடகாவிலேயே குடும்பத்துக்காக ஒரு அபார்ட்மெண்ட்டும் வாங்கியுள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்