பிரபாஸை விட ஸ்ரீதேவி பேர் வாங்கியிருப்பார் - ராம்கோபல் வர்மா சர்ச்சை கருத்து

செவ்வாய், 9 மே 2017 (13:14 IST)
பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா பாகுபலி பட ஹீரோ பிரபாஸை மட்டம் தட்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் எப்போதும் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வருபவர் ராம்கோபால் வர்மா. இந்நிலையில், சமீபத்தில் வெளியாகி உலகமெங்கும் பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்ற பாகுபலி2 படத்தை பற்றி  அவர் கருத்து தெரிவித்திருந்தார். 
 
பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி வேடத்தில் நடிக்க படக்குழு முதலில் ஸ்ரீதேவியைத்தான் நாடினார்கள். ஆனால், அவர் அதிக சம்பளம் கேட்டதால், அவருக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் நடித்தார். 


 

 
இந்நிலையில் இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராம்கோபால் வர்மா “பாகுபலி2 படத்தில் ஸ்ரீதேவி ஏன் நடிக்கவில்லை எனத் தெரியவில்லை. அவர் மட்டும் அதில் நடித்திருந்தால், பிரபாஸை விட அவர் பேர் வாங்கியிருப்பார்” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
இந்த கருத்து பிரபாஸ் ரசிகர்களை கோபம் அடைய செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்