என்ஜிகே படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் ரகுல் ப்ரீத் சிங்

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (13:14 IST)
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தின் படப்பிடிப்பில் இன்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் கலந்து கொள்கிறார்.
 
நடிகர் சூர்யா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தார். இதனையடுத்து, இயக்குனர் செல்வராகவனுடன் என்ஜிகே என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகைகள் சாய் பல்லவி, ராகுல் பிரீத், பிரபு உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 
 
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கம் ஸட்ரைக் அறிவித்தது. அதனால் படப்பிடிப்பு தடைபட்டிருந்தது. தற்போது ஸ்ட்ரைக் முடிந்து படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
 
இந்நிலையில், இன்று என்ஜிகே படப்பிடிப்பில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் கலந்து கொள்ள போவதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்