ஆர் ஆர் ஆர் படத்தை திரும்பவும் படம்பிடிக்கும் ராஜமௌலி… இதுதான் காரணமா?

செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (16:48 IST)
இயக்குனர் ராஜமௌலி இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தின் படப்பிடிப்பு மறுபடியும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் , அஜய் தேவ்கான் மற்றும் ஆலியா பட் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அஜய் தேவ்கான் சம்மதித்துள்ளார். இந்நிலையில் படத்தின் பெரும்பகுதிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கம்மியாக இருப்பதால் ராம்சரண் கருதியதால் அவருக்காக சில காட்சிகளை மீண்டும் படமாக்க உள்ளாராம் ராஜமௌலி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்