பல மாதங்களுக்கு பின் குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்த பிரியங்கா சோப்ரா!

Webdunia
திங்கள், 9 மே 2022 (10:49 IST)
பல மாதங்களுக்கு பின் குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்த பிரியங்கா சோப்ரா!
நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாடகை தாய் மூலம் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தையின் புகைப்படத்தை முதன்முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
 
கடந்த 2018 ஆம் ஆண்டு நிக் ஜோன்ஸ் என்ற அமெரிக்க பாடகரை திருமணம் செய்து கொண்ட பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்தார் 
 
இதனை அடுத்து கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் வாடகை தாய் மூலம் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை சில மாதங்கள் மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்ற நிலை இருந்ததால் இதை அவர் குழந்தையின் புகைப்படத்தை வெளியிடவில்லை 
 
இந்த நிலையில் நேற்று அன்னையர் தினத்தில் தனது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக பிரியங்கா சோப்ரா பகிர்ந்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்