பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம்...சம்பளம் இத்தனை கோடியா?

Sinoj

சனி, 6 ஏப்ரல் 2024 (22:10 IST)
தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர் பிரதீப் ரங்க நாதன். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு கோமாளி என்ற படத்தை இயக்கியினார்.
 
இதையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு பிரதீப் ரங்க நாதன் இயக்கி நடித்த படம் லவ் டுடே. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
 
இப்படம்  நல்லர வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. இதையடுத்து, தற்போது பிரதீப் ரங்க நாதன் எல்.ஐ. சி என்ற படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
 
இந்த நிலையில், தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி கிரியேசன்ஸ்  பல ஆயிரம் மோடி முதலீட்டில், தமிழில் தயாரிக்கவுள்ள படங்களில், ஒரு படம் பிரதீப் ரங்க நாதனை வைத்து தயாரிக்கவுள்ளது.
 
இப்படத்திற்கு ரூ.10 கோடி பிரதீப் ரங்க நாதன் சம்பளம் பேசியுள்ளதாகவும் இரு தரப்பும் பேசி கடைசியில் இதே சம்பளத்திற்கு ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகிறது.
 
இப்படத்தில் இந்த சம்பளத்தில் கமிட் ஆவதற்கு முன் அவர் ரூ.15 கோடி வரை சம்பளம் பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்