பவர் பாண்டி தனுஷின் அடுத்த முயற்சி தொடங்கியது

வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (10:50 IST)
நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகம் கொண்டவர் தனுஷ். இவர் பவர் பாண்டி' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்தார்.

இந்தப் படத்தில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தனுஷ், மடோனா செபாஸ்டியன் ஆகியோர்  சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர்.
 
இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதைத்தொடர்ந்து தற்போது தனுஷ் தனது இரண்டாவது படத்தை இயக்கவுள்ளார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
 
தனுஷின் புதிய படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. நடிகர் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில்  நடிக்கவுள்ளார்கள். நடிகர் சரத்குமார், தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா ஆகியோர் முக்கிய கேரக்டரில் தோன்றவுள்ளார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்