பொன்னியின் செல்வன்’ பணியை திடீரென நிறுத்த சொன்ன மணிரத்னம்: என்ன காரணம்?

வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (22:08 IST)
இந்தியாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் ஒன்று பொன்னியின் செல்வன் என்பது அனைவரும் அறிந்ததே
 
இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் திடீரென கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த நான்கு மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவில்லை 
 
இதனை அடுத்து கலை இயக்குனர் ஒருவரின் ஆலோசனைப்படி சென்னை ஐஐடி வளாகத்தில் இந்த படத்தின் அடுத்தகட்ட பணியை தொடங்க மணிரத்னம் முடிவு செய்து இருந்தார். இதற்கான பணிகளும் நடைபெற்று வந்தது
 
இந்த நிலையில் திடீரென பொன்னியின் செல்வன் பணியை நிறுத்துமாறு மணிரத்னம் தனது குழுவினர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மணிரத்தனம் ஏன் பணிகளை நிறுத்த சொன்னார் என்று யாருக்கும் புரியவில்லை என்பதால் பெரும் குழப்பமாக உள்ளது
 
இந்த தகவலை வைத்து பொன்னியின் செல்வன் படம் டிராப் என்ற வதந்தி கோலிவுட்டில் தற்போது உலாவி வருகிறது. ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படம் டிராப் ஆக வாய்ப்பே இல்லை என படக்குழுவினர் உறுதியாக நம்புகின்றனர் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்