மீண்டும் பொன்னியின் செல்வனுக்கு அதிகரிக்கும் கூட்டம்!

புதன், 26 அக்டோபர் 2022 (10:26 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு தீபாவளிக்குப் பிறகும் கூட்டம் அதிகமாகியுள்ளது.

கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்போது படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்ட நிலையில் இதுவரை 450 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளிக்கு சர்தார் மற்றும் பிர்ன்ஸ் என இரு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிய நிலையிலும், இப்போது மீண்டும் இந்த படத்துக்கு காட்சிகள் அதிகமாகியுள்ளன. இதற்கு பிரின்ஸ் மற்றும் சர்தார் ஆகிய படங்கள் பெரியளவில் திருப்தி படுத்தவில்லை என்பதே காரணம் என்று சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்