முகமூட, பாதுகாப்பாக இரு! கோவிட் பாசிடிவ் ஜெயம் ரவி அட்வைஸ்!

சனி, 22 அக்டோபர் 2022 (08:59 IST)
பொன்னியின் செல்வனாக நடித்த நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாம்.

 
பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க எம்ஜி ஆர் மற்றும் கமல் முயன்று அது நிறைவடையாத நிலையில் இயக்குனர் மணிரத்னம் இதனை சாத்தியமாக்கியுள்ளார். அவரும் ஏற்கனவே ஒருமுறை தொடங்கி ஆனால் அதை முடிக்காமல் கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது இரண்டு பாகங்களாக உருவாகி முதல் பாகம் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் மற்றும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் ஆகிய படங்கள் வெளியாகி இருக்கும் போதும் பொன்னியின் செல்வன் படத்திற்கு தியேட்டர்கள் இன்னும் இருக்கிறது.

இதனிடையே இப்படத்தில் பொன்னியின் செல்வனாக நடித்த நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாம். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளப்பக்கமான டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, இன்று மாலை எனக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியானது.

அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, நான் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவைப்பட்டால் தங்களைப் பரிசோதித்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். முகமூடி. பாதுகாப்பாக இரு! கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Edited By: Sugapriya Prakash

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்