ரிலீஸுக்கு முன்பே வசூல் சாதனை படைத்த ''பொன்னியின் செல்வன்''!

புதன், 28 செப்டம்பர் 2022 (17:45 IST)
பொன்னியின் செல்வன் -1  படம் வரும் 30 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், இதற்காக டிக்கெட் முன்பதிவும் இப்படம் சாதனை படைத்துள்ளது.

 
அமரர் 
கல்கியின் பிரபல நாவலான பொன்னியின் செல்வனை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக இயக்கியுள்ளார். பிரமாண்டமாக உருவாகியுள்ள  இப்படத்தை ரசிகர்களுடன் இணைந்து ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்களும் இயக்குனர்கள் இப்படத்தைக் காண ஆர்வமுடன் உள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் சமீபத்தில், இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டது.

இதுவரை  6 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், முன்பதிவில் மட்டும் ரூ.8 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளதாகவும்.

அஜித், விஜய், ரஜினி,கமலின் படங்களுக்கு இணையாக பொ.செ-1 படம் வசூலில் சாதனை படைத்துள்ளது சினிமாத்துறையினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், 2 வாரங்களுக்கான டிக்கெட் விற்றுத் தீர்ந்துள்ள நிலையில் 750 திரையரங்குகளில் இப்படம் ரிலீஸாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்