பராசக்தி படத்தை வாங்கத் தயங்கும் ஓடிடி நிறுவனங்கள்… பின்னணி என்ன?

vinoth

செவ்வாய், 7 அக்டோபர் 2025 (09:40 IST)
சிவகார்த்திகேயன், ரவி மோகன் மற்றும் அதர்வா ஆகியோர் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் டான் பிக்சர்ஸ் சார்பில் ‘பராசக்தி’ திரைப்படம் உருவாகி வருகிறது.  முதலில் தமிழ்நாட்டின் பல இடங்களில் நடந்த படப்பிடிப்பு கடைசியாக இலங்கையில்படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. ‘பராசக்தி’ திரைப்படம் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தோடு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகும்  என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இல்லத்தில் அமலாக்கத்துறையின் சோதனையிட்ட நிலையில் அவர் தயாரித்து வந்த ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங்கில் சிறு தாமதம் ஏற்பட்டது. ஆனால் இப்போது பிரச்சனைகள் முடிந்து மீண்டும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகிறது.

இந்த படத்தினை வாங்க ஓடிடி நிறுவனங்கள் ஒருவிதத் தயக்கம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் இந்த படம் இந்தி திணிப்பு எதிர்ப்பைப் பேசுவதால் வட இந்தியாவில் படத்துக்கு எதிர்ப்பு உருவாகுமோ என்று அச்சப்படுவதாக சினிமா வட்டாரத்தில் தகவல் ஒன்று பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்