கடந்த வெள்ளிக் கிழமை வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஆனாலும் படத்துக்கு தொடர்ந்து ரசிகர்கள் கூட்டம் செல்கிறது. இதில் பெரும்பாலானவர்கள் மறைந்த விஜயகாந்தின் ரசிகர்கள். ஏனென்றால் இந்த படத்தில் விஜயகாந்தை ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக மீளுருவாக்கியுள்ளனர். ஏற்கனவே விஜய்யின் கோட் படத்திலும் இதுபோல் விஜயகாந்த் சம்மந்தப்பட காட்சிகள் இருந்தன.
இந்நிலையில் இந்த படம் கௌரவமான வசூலைப் பெற்று வருகிறது. மூன்று நாளில் மொத்தம் மூன்று கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது படை தலைவன் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் லாபம் பார்க்க வேண்டுமென்றால் திரையரங்கு மூலமாக 10 கோடி ரூபாயாவது ஈட்ட வேண்டும். அதை படை தலைவன் ஈட்டுமா என்பது இந்த வாரத்தில் ரசிகர்களின் ஆதரவு படத்துக்குக் கிடைப்பதைப் பொறுத்துதான் உள்ளது.