ஓவியாவுக்காக மாறும் கதை… கடுப்பில் ரெஜினா

வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (18:53 IST)
ஓவியாவின் கதை மாற்றி அமைக்கப்படுவதால், ஹீரோயினாக நடித்துள்ள ரெஜினா கடுப்பில் இருக்கிறாராம்.



 
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’. செல்லா இயக்கிவரும் இந்தப் படத்தில், ரெஜினா ஹீரோயினாக நடிக்கிறார். பாடல் மற்றும் ஒருசில காட்சிகளில் ஓவியா நடிக்கிறார். கிட்டத்தட்ட கெஸ்ட் ரோல் என்ற அளவுக்கே அவருடைய போர்ஷன் இருந்தது.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஓவியா கலந்துகொண்ட பிறகு, அவருடைய மார்க்கெட்டே தனி. எனவே, ஓவியாவின் போர்ஷனை அதிகப்படுத்தலாம் என முடிவெடுத்த இயக்குநர், ஓவியாவிடம் பேசி வருகிறார். இதனால், எங்கே தன்னுடைய போர்ஷன் கம்மியாகிவிடுமோ என்று நினைத்து, ஓவியா மீது கடுப்பில் இருக்கிறாராம் ரெஜினா.

வெப்துனியாவைப் படிக்கவும்