அசோக் செல்வன் நடிக்கும் நித்தம் ஒரு வானம்… சென்சார் தகவல்!

செவ்வாய், 25 அக்டோபர் 2022 (15:31 IST)
அசோக் செல்வன் நடித்துள்ள நித்தம் ஒரு வானம் திரைப்படம் நவம்பர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்துக்கு பிறகு வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் தமிழில் அடுத்து தயாரிக்கும் படத்துக்கு நித்தம் ஒரு வானம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. போதை ஏறி புத்தி மாறி படத்தை தயாரித்திருந்த ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கிறது.

அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரா கார்த்திக் இயக்கியுள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் இப்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து படம் சென்சார் செய்யப்பட்டு யு சான்றிதழ் பெற்றுள்ளது. இதைப் படக்குழு அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்