ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தினசரி பாதிப்பு! – முடிவுக்கு வந்த கொரோனா?

செவ்வாய், 25 அக்டோபர் 2022 (10:21 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் நீடித்து வந்தாலும் நீண்ட நாட்கள் கழித்து ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 862 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,46,44,938 ஆக உயர்ந்துள்ளது.

ALSO READ: சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,28,980 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,93,409 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 22,549 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Edited By: Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்