'மகாராஜா’ படத்திற்கு பின் ‘மகராணி’.. நிதிலன் சுவாமிநாதன் அடுத்த படம்..!

Mahendran

திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (16:47 IST)
நிதிலன்  சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்றது என்பது தெரிந்தது. விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான இந்த படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நிதிலன் சுவாமிநாதன் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் படத்தை அவர் இயக்க இருப்பதாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி நயன்தாரா நடிப்பில் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் ஒரு படம் உருவாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த படத்திற்கு மகாராணி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் போடப்படுகிறது.
 
மேலும் பல வெற்றி படங்களை தயாரித்த பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
 
சமீப காலமாக நயன்தாராவின் படங்கள் எதிர்பாத்த வெற்றியை தராத நிலையில் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகும் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்