இதை சொல்ல இவர் யார்? சமந்தாவை அடுத்து மருத்துவரிடம் சிக்கி கொண்ட நயன்தாரா..!

Siva

திங்கள், 29 ஜூலை 2024 (16:55 IST)
செம்பருத்தி டீ குடித்தால் நல்லது என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு சர்ச்சையில் நயன்தாரா சிக்கியுள்ளார்.

செம்பருத்தி டீ சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு என நயன்தாரா பதிவிட்டிருந்தார். இதற்கு கொந்தளித்த டாக்டர் ஆபி பிலிப்ஸ் செம்பருத்தி டீ சுவையானது என சொன்னால் மட்டும் போதும்.. ஆரோக்கியம் குறித்து பேச நயன்தாரா யார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே நடிகை சமந்தா நெபுலைசர்  குறித்து தனது இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்த போது அதை எதிர்த்து கடுமையாக குரல் கொடுத்தவர் தான் இந்த டாக்டர் ஆபி பிலிப்ஸ். சமந்தாவை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் சமந்தா பிரச்சனை தற்போது தான் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக அவர் நயன்தாராவை குறிவைத்து விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்