பீஸ்ட் படத்தில் என்ன பிரச்சனை… மனம் திறந்து பேசிய நெல்சன்!

திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (08:54 IST)
கடந்த ஆண்டு வெளியான பீஸ்ட் படத்துக்குக் கடுமையான விமர்சனங்கள் வந்ததையடுத்து இயக்குனர் நெல்சன் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். இந்நிலையில் இப்போது அவரின் ஜெயிலர் திரைப்படம் ரிலீஸாகி 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நெல்சன் பீஸ்ட் படத்தில் நடந்த குளறுபடிகள் பற்றி பேசியுள்ளார். அதில் “பீஸ்ட் படத்துக்காக நான் இன்னும் சில மாதங்கள் உழைத்திருந்தால் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும். எங்களுக்கு கொரோனா மிகப்பெரிய இடையூறாக இருந்தது. வி எஃப் எக்ஸ் பணிகளையும் முழுமையாக முடிக்க முடியவில்லை. சில காட்சிகளை படமாக்காமலேயே விட்டுவிட்டோம்.” எனக் கூறியுள்ளார்.

மற்றொரு நேர்காணலில்  பேசிய நெல்சன் “ஜெயிலர் 2 உருவாக்கும் திட்டம் உள்ளது. அதுமட்டுமில்லை, நான் இயக்கிய பீஸ்ட் மற்றும் டாக்டர் படங்களுக்கும் செகண்ட் பார்ட் உருவாக்கும் எண்ணம் உள்ளது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்