சமந்தாவுக்கு நயன்தாரா கொடுத்த ஸ்பெஷல் பரிசு!

வியாழன், 31 மார்ச் 2022 (15:04 IST)
சமந்தா தனது சக நடிகரும் நடிகையுமான நயன்தாராவிடமிருந்து சிறப்புப் பரிசைப் பெற்றுள்ளார். 

 
விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார்.
 
இந்த படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  இந்த படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இப்போது ரிலீஸுக்கான வேலைகள் நடந்து வருகின்றன.
 
படப்பிடிப்பின் கடைசி நாளன்று, சமந்தா தனது சக நடிகரும் நடிகையுமான நயன்தாராவிடமிருந்து சிறப்புப் பரிசைப் பெற்றதால் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தார். அவர் பரிசின் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு, நன்றி அன்பே நயன் என பதிவிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்