கைநிறைய படங்கள்... ஆனாலும் கதை கேட்பதை நிறுத்தாத நயன்தாரா

வெள்ளி, 29 ஜூன் 2018 (15:17 IST)
கைநிறைய படங்கள் இருந்தாலும், கதை கேட்பதை நிறுத்தவில்லை நயன்தாரா.
 
15 வருடங்கள் ஆனாலும், இன்னும் நம்பர் 1 நடிகையாக இருக்கிறார் நயன்தாரா. பெரிய நடிகர்களில் இருந்து இளம் நடிகர்கள் வரை நயன் தங்கள் படங்களில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். காரணம், நயனுக்கு எனத் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
 
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருக்கட்டும், ஏதாவது ஹீரோவுக்கு ஜோடியாக நடிப்பதாக இருக்கட்டும்... தனக்குப் பிடித்திருந்தால், தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் உடனே ஓகே சொல்லி விடுவார்.
 
சிரஞ்சீவி ஜோடியாக ‘சை ரா நரசிம்ம ரெட்டி’, அஜித் ஜோடியாக ‘விசுவாசம்’, சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படம், கே.எம்.சர்ஜுன் இயக்கும் படம், ‘கோலமாவு கோகிலா’, ‘கொலையுதிர் காலம்’, ‘இமைக்கா நொடிகள்’, ‘அறம் 2’ ஆகிய படங்கள் தற்போது நயனிடம் இருக்கின்றன.
 
ஆனாலும், தொடர்ந்து கதைகள் கேட்டு வருகிறார் நயன்தாரா. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தாலும், கதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் கவனமாக இருக்கிறார். அதுதான் அவருடைய வெற்றிக்கு காரணம் என்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்