வர்மா போல ஆன நாற்காலி திரைப்படம்… இயக்குனருக்கும் அமீருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்!

சனி, 31 ஜூலை 2021 (15:59 IST)
நாற்காலி படத்தின் இயக்குனர் துரைக்கும் அந்த படத்தின் கதாநாயகன் அமீருக்கும் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக உருவான அமீர் ஆதிபகவன் படத்தின் தோல்விக்குப் பிறகு அதிகமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். வடசென்னை படத்தில் அவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதையடுத்து அடுத்ததாக நாற்காலி என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அரசியல் கதைக்களம் கொண்ட படமாக உருவாகி வரும் நாற்காலி படத்தை முகவரி, தொட்டி ஜெயா ஆகிய படங்களை இயக்கிய வி. இசட். துரை இயக்கியுள்ளார். நீண்ட காலமாக நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் படத்தொகுப்பை இயக்குனர் முடிக்க அதில் தயாரிப்பாளருக்கும் நடிகர் அமீருக்கும் திருப்தி இல்லையாம். அதனால் அமீர் வேறு ஒரு விதமாக படம் முழுவதையும் எடிட் செய்து காட்ட அது தயாரிப்பாளருக்கு திருப்தியை தந்துள்ளதாம். ஆனால் இது இயக்குனர் வி இசட் துரைக்கு பயங்கர கோபத்தைக் கிளப்பியுள்ளதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்