“எனக்கு வாய்ப்பு இல்லைனு யார் சொன்னது?” - பொங்கியெழுந்த நந்திதா

சனி, 18 நவம்பர் 2017 (13:17 IST)
‘எனக்கு வாய்ப்பில்லைனு யார் சொன்னது?’ எனப் பொங்கி எழுந்திருக்கிறார் நந்திதா.





‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நந்திதா, பின்னாளில் நந்திதா ஸ்வேதா எனத் தன் பெயரை மாற்றிக் கொண்டார். எத்தனையோ படங்களில் நடித்தாலும், ‘அட்டகத்தி’ மற்றும் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படங்கள் மட்டும்தான் வெற்றிப் படங்களாக அமைந்தன. மற்ற படங்கள் ஓடாததால், இரண்டாவது ஹீரோயின் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார் என்றார்கள். இதைக் கேள்விப்பட்டு பொங்கி எழுந்துவிட்டார் நந்திதா. “எனக்கு வாய்ப்பு இல்லையென்று யார் சொன்னது? என் கைவசம் ஐந்தாறு படங்கள் உள்ளன” என்கிறார்.

நந்திதா நடிப்பில் ‘உள்குத்து’, ‘காத்திருப்போர் பட்டியல்’, ‘வணங்காமுடி’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராக உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்