சமந்தா கணவரின் தேங்க்யூ – சூர்யா இயக்குனரின் அடுத்த படம்!

திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (11:44 IST)
சூர்யா நடிப்பில் உருவான 24 படத்தின் இயக்குனர் விக்ரம் குமார் அடுத்ததாக தேங்க்யூ என்ற படத்தை இயக்கவுள்ளார்.

தமிழில் அலை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் விக்ரம் கே குமார். அந்த படத்துக்கு அவர் இயக்கத்தில் வெளியான யாவரும் நலம் திரைப்படம் அவருக்கான அடையாளத்தைப் பெற்றுத்தந்தது. அதன்பின் தெலுங்கில் முன்னணி இயக்குனராக மாறிய அவர் சூர்யாவை வைத்து 24 படத்தை இயக்கினார்.

இந்நிலையில் இப்போது சமந்தாவின் கணவர் நாக சைதன்யாவை வைத்து தேங்க்யூ என்ற படத்தை இயக்க உள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேற்று நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜூனாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியானது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்