மீண்டும் தொடங்கும் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம்… வெளியான தகவல்!

செவ்வாய், 12 ஜூலை 2022 (09:16 IST)
விஷால் மற்றும் SJ சூர்யா நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மார்க் ஆண்டனி  படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் விஷால். இந்த படத்தை விஷாலின் எனிமி படத்தை தயாரித்த மினி ஸ்டுடியோஸ் வினோத்குமாரே தயாரிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார் என சமீபகாலமாக அப்டேட்கள் வந்து கொண்டிருந்தன. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் படத்துக்காக அமைக்கப்படும் செட்டில் இருந்து புகைப்படம் எடுத்து அதைப் பகிர்ந்திருந்தார்.

கடந்த மே மாதம் படத்தின் பூஜை நடந்தது. இதில் படத்தின் நாயகன் விஷால், மற்றும் எஸ் ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரீத்து வர்மா நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் விஷால் ‘லத்தி’ படத்தில் கவனம் செலுத்தியதால் சிறிது காலம் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது மீண்டும் இந்த மாதம் 18 ஆம் தேதி முதல் ‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்தில் விஷால் மார்க் ஆண்டனி என்ற கேங்ஸ்டர் வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்