தன் வாழ்க்கையில் நடந்ததை சினிமாவாக எடுக்க தைரியம் வேண்டும்… மாரி செல்வராஜுக்கு சுதா கொங்கரா வாழ்த்து!

vinoth

திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (14:07 IST)
தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ படம்  கடந்த வெள்ளிக் கிழமை வெளியானது. இந்த படத்தில் கலையரசன், நிக்கிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, மாரி செல்வராஜ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளார்.

இந்த படம் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்தின் ரிலீஸுக்கு முன்பே இதற்கு ஒட்டுமொத்த தமிழ் சினிமா இயக்குனர்களும் சேர்ந்து ப்ரமோஷன் செய்தனர். இந்நிலையில் இப்போது இறுதிச்சுற்று மற்றும் சூரரைப் போற்று ஆகிய திரைப்படங்களின் இயக்குனர் சுதா கொங்கரா வாழை படம் பற்றி சிலாகித்துப் பேசியுள்ளார்.

அதில் “தன் வாழ்க்கையில் நடந்த ஒரு துயரச் சம்பவத்தை லட்சக்கணக்கான மக்களின் முன்வைக்க மிகப்பெரிய தைரியம் வேண்டும். மாரி செல்வராஜுக்கு என்னுடைய பாராட்டுகள். வாழை தமிழ் சினிமாவின் சினிமா பாரடைசோ” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்